முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-ரஷ்யா இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்களை தயாரிக்கின்றன

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: இந்தியா-ரஷ்யா ஆகியவை இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்களை உருவாக்குகின்றன இது தொடர்பான ஒப்பந்தம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.இந்தியாவில் உருவாக்குவோம் என்ற இயக்கத்தை மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டது.அந்த திட்டத்தின் அடிப்படையில் ரஷ்யாவின் கூட்டு முயற்சியோடு ராணுவ ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படுகின்றன என்று ரஷ்யாவில் உள்ள இந்திய தூதர் பி.எஸ் ராகவன் தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யாவுடன்  பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை இந்தியா கடை பிடித்து வருகிறது.பாதுகாப்புத்துறைக்கு மற்ற நாடுகளில் வாங்கும் ராணுவ கருவிகளைக்காட்டிலும் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவில் ராணுவ கருவிகளை வாங்குகிறது. சமீபத்தில் பிரான்சிடம் இருந்து 36ராபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்திருந்தது.

இந்தியா.ரஷ்யா உறவு மிக பெரும் உயரிய உறவைக் கொண்டதாகும்.ஒவ்வொரு நாளும் இந்த நாடுகளின் உறவு வலுவடைந்து வருகிறது என இந்திய தூதர் ராகவன் குறிப்பிட்டார். இந்தியாவில் 200 ராணுவ ஹெலிகாப்டர் ரஷ்ய தொழில் நுட்பம், உரிமம் உற்பத்தி ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்படுகிறது.இந்தியா அதிக அளவில் ராணுவ கருவிகளை வாங்கும் நாடாக ரஷ்யா உள்ளது என்றும் பிரதமர் மோடி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.அதனையும் இந்திய தூதர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து