எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, புதுடெல்லியில் நடைபெற்ற 46–வது இந்திய தொழிலாளர் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா முயற்சியால் தொழிற்சாலைகள் சட்டம், இதர சட்டங்கள் அமல்படுத்துவதில் பாதுகாப்பான, வலுவான தொழில் சூழ்நிலை எதிரொலியாக தமிழ்நாட்டில் தொழில் துவங்க பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் வந்தவண்ணம் உள்ளன என்று தொழிலாளர் நலத்துறை ப. மோகன் பெருமிதத்தோடு கூறினார்.
அமைச்சர் ப. மோகன் பேசியதாவது:–
தமிழகம் அனைத்து துறைகளிலும் பொருளாதார வளர்ச்சியினை விரைவில் எட்டக்கூடிய வகையில் சீரிய திட்டங்களை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. அத்தகைய ஒரு திட்டமாக தொலைநோக்கு பார்வை -2023 என்ற திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. பாரதத்தின் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. மாநில பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தி துறையின் பங்கீட்டினை அதிகரித்தல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை துடிப்புடன் முன்னேற்றுவது, தொழிலாளர் திறன் மேம்பாட்டில் மிகுந்த கவனம் செலுத்துதல் போன்ற சீரிய திறன் வாய்ந்த திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்துவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் பரஸ்பர ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் நன்மதிப்பின் மூலமே முன்னேற இயலும். உரிய நேரத்தில் சமரச அலுவலர்களின் தலையீட்டின் மூலம் மாநிலத்தின் தொழில் அமைதி கடைபிடிக்கப்படுகிறது. வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்பு ஆகியவை தமிழ்நாட்டில் தற்போது இல்லையென்றே கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்தை எட்டுவதற்கு தொழில் அமைதி அவசியமானது ஆகும். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகிய பல்வேறு துறைகளுடன் இணைந்து சிறப்பு ஆய்வுக் குழுக்களாக பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ஆய்வுக் குழுக்கள் தொழில் நிறுவனம் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான நடைமுறைகளில் பணி செய்ய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
பாதுகாப்பான சூழ்நிலையில் பணிபுரிய…
கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையில் பணிபுரிய தொடர்ச்ச்யாக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் இதர சட்டங்களை நடைமுறைக்கு ஏற்றவாறு அமல்படுத்துவதில் பாதுகாப்பான மற்றும் வலுவான தொழில் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதால், பல்வேறு பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தமிழ்நாட்டில் துவக்கி வருகின்றனர்.
தமிழக அரசின் முற்போக்கு கொள்கைகளாலும், தொழிற்துறை வளர்ச்சிக்கான சாதகமான சூழ்நிலையினாலும், தொடர்ந்து முதலீட்டாளர்களால் உற்பத்தித் துறையில் தொழில் அமைக்க விரும்பத்தக்க மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு தானியங்கி வாகனத்துறையிலும், சேவைத்துறையிலும், முன்னிலை வகிக்கும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. அதிக முதலீடுகளால் மிக அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. தமிழ்நாடு அரசு தற்போதுள்ள 62 தொழில் பயிற்சி மையங்களுடன் கூடுதலாக 15 புதிய தொழில் பயிற்சி மையங்கள் துவங்கியுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இதுவரை 21 துறைகளில் 3.21 லட்சம் நபர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளது. நடப்பாண்டில் இப்பணிக்கென தமிழ்நாடு அரசு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
72 ஆயிரம் பேருக்கு அரசு துறையில் வேலை
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 71,531 நபர்கள் அரசு துறைகளில் பணி பெற்றுள்ளனர். வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 83,384 வேலையில்லாதோர் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வளாக தேர்வு மூலம் 51,780 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் வழியாக 8,460 நபர்கள் அயல்நாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
இளைஞர்களுக்குப் புதிய திறன் மேம்பாட்டு பயிற்சி, மறுதிறன் பயிற்சி மற்றும் பன்முகத்திறன் பயிற்சி போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த மனித வளம் மேம்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் திறன் மிக்க இளைய சமுதாயம் உலகச் சந்தையில் சவாலான பணிகளை எதிர்கொள்ளத் தயாரான நிலையில் உள்ளனர்.
தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் முறையினை ஒழிப்பதில் சீரிய கவனம் செலுத்தி வருகிறது. குழந்தை தொழிலாளர்கள் பெருமளவு குறைந்து குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்தில் மாவட்டங்கள் குழந்தை தொழிலாளர்கள் அற்றவைகளாக அறிவிக்கப்படும் நிலையினை அடைந்து வருகின்றன. தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் 15 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 259 சிறப்புப் பள்ளிகளில் 10,832 குழந்தைகள் பயின்று வருகின்றனர். 2010–-2011 முதல் 2014–-2015 வரை 14,795 குழுந்தைகள் முறை சார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சமூக நலத்திட்டங்களில் முன்னோடி மாநிலம்
தமிழ்நாடு பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதில் முன்னோடி மாநிலமாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் (நிலைப்படுத்துதல் மற்றும் தொழில் நிலைகள்) சட்டம் 1982 இயற்றியுள்ளது. தமிழக அரசு 69 தொழில் இனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கிட இதுவரை 17 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை உருவாக்கியுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி, குடும்ப ஒய்வூதியம், கண் கண்ணாடி உதவி, இயற்கை மரண உதவி, விபத்து ஊனம் மற்றும் விபத்து மரண உதவி மற்றும் ஈமச்சடங்கு உதவி ஆகிய சமூக பாதுகாப்பு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அமைப்பு சாரா நல வாரியங்களில் 63.82 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 32.96 லட்சம் பயனாளிகளுக்கு 837 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு மின்னணு பரிமாற்றம் மூலம் நேரடியாக செலுத்தப்படுகிறது. உறுப்பினர் பதிவினை புதுப்பிப்பதற்கான கால வரம்பு 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது பணியிடத்தில் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது, விபத்து ஏற்பட்டு இறக்க நேர்ந்தால், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த விபத்து நிவாரண நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டு தொழிலாளியின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்களின் பணியிடத்திலேயே நடமாடும் சுகாதார சேவை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்தல், அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படும் மையங்களில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பல்மொழியில் கல்வி பெற ஏதுவாக உரிய போக்குவரத்து வாகன வசதிகளை ஏற்படுத்துதல், கட்டுமானத் தொழிலாளர்களின் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி வசதியை அளித்தல் மற்றும் பணியிடங்களின் அருகில் தற்காலிக தங்கும் இட வசதிகள் செய்திடும் வகையில் தூங்கும் அறைகள் கட்டுதல் ஆகிய திட்டங்களை புதிய முயற்சியாக செயல்படுத்தி தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
கனிணி மூலம் ஆண்டறிக்கை தாக்கல்தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்கிட அவர்களின் பதிவேடுகள் மற்றும் ஆண்டறிக்கைகளை கனிணி மூலம் சமர்ப்பிக்க ஏதுவான தொழில் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில் வணிகம் சுமூகமாக மேற்கொள்வதற்கு வசதியாக ஆய்வு திட்டம் comprehensive inspection scheme ஒன்றினை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில் புகார்கள் அடிப்படையில் ஆய்வு மற்றும் தரம் வாய்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது.
தொழில் வளர்ச்சியும், தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனையும் சமமாக பாதுகாத்திட தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் அவசியமானது. தொழிலாளர் மற்றும் நிறு வனங்களிடையே ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும், தொழில் உற்பத்தி பெருகவும், தொழிலாளர்களுக்குப் போதிய நலத் திட்டங்களுடன் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இத்தகைய அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் உபயோகமானதாக இருக்குமென கருதுகிறேன்.
இத்தகைய வரலாற்று சிறப்பு மிகுந்த மாநாட்டில் பங்கேற்றிட வாய்ப்பளித்தமைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ப.மோகன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.