முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: 31-ம் தேதி தேரோட்டம்

வியாழக்கிழமை, 23 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

அலங்காநல்லூர் -  அழகர் கோயிலில் அடித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும் 31ம் தேதி திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. மதுரை மாவட்டம், அழகர்கோயிலில் ஆடித்திருவிழா நேற்று கைலை 7.25 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு மலர் மாலைகள், நாணல் புல், மாவிலை தோரணங்களால் தங்க கொடிமரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று முதல் அன்னம், சிம்மம், கருடர், சேஷ, குதிரை, உள்ளிட்ட வாகனங்களில் கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜ பெருமாள் உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும். வரும் 31ம் தேதி ஆடித்தேரோட்டம் நடக்கிறது. இதற்காக சுமார் ரூ.1 கோடி செலவில் தேர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை, தக்கார் வெங்கடாசலம் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து