முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புஷ்கரத்தில் லட்சக்கணக்கானோர் நீராடல்: போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

வியாழக்கிழமை, 23 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

ராஜமுந்திரி - கோதாவரி மகாபுஷ்கரம் விழாவின் 9-வது நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் புஷ்கரமே திணறியது. கோதாவரி மகாபுஷ்கரத் துக்காக ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தாலும், வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

இதனால், ஹைதராபாத்-விஜயவாடா மற்றும் கொல் கொத்தா-சென்னை ஆகிய நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.  வரும் 25-ம் தேதியுடன் புஷ்கரம் நிறைவடைவதால் இப்போது கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் 9-வது நாளில் மட்டும் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை படுகாயமடைந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ராஜமுந்திரியில் முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி கோதாவரி புஷ்கரத்தில் புனித நீராடினார். அப்போது அவர், சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இரு அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து