முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் முறைகேடு வழக்கில் நவாஸ் செரீப் விடுவிப்பு : பாக். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 24 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - தேர்தல் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு விடுவிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என் கட்சி 272 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக் - இ - இன்சாப் கட்சி 35 இடங்களில் வென்றது.

எனவே கள்ள ஓட்டு உள்ளிட்ட முறைகேடுகளில் நவாஸ் செரீப்பும் அவரது கட்சியும் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார். லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

அதை தொடர்ந்து இது குறித்து விசாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கமிஷனை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இக்குழு உயர்மட்ட விசாரணை நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் நவாஸ் செரீப்பும் அவரது கட்சியும் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தேர்தல் முறைகேடு வழக்கில் இருந்து நவாஸ் செரீப்பையும் அவரது கட்சியையும் சுப்ரீம் கோர்ட்டு விடுவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து