முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்சர் படேல் பந்து வீச்சு குறித்து சுனில் கவாஸ்கர் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 24 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை - சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் பந்துவீச்சு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது, இந்திய அணி எதிர்பார்க்கும் அடுத்த பெரிய ஸ்பின்னர் என்று அக்சர் படேலைக் கூற முடியாது. அவர் பந்தை சும்மா உருட்டுகிறார், அவரிடம் பிளைட் இல்லை, அவரது பந்துகள் எளிதில் கணித்துவிடக் கூடியதாகவே உள்ளது.

பிட்ச் உதவி செய்தாலே தவிர அவரால் பந்துகளை திருப்பவே முடியவில்லை. ஒரு மிதவேகப்பந்து வீச்சாளரை விட மெதுவாக வீசுகிறார் அவ்வளவே. அஸ்வின், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, கரண் சர்மாவிடம்தான் நாம் அதிகம் எதிர்பார்க்க முடியும். நிச்சயம் அக்சர் படேலை எதிர்பார்க்க முடியாது என்றார் சுனில் கவாஸ்கர்.

கடந்த சில ஆண்டுகளாகவே தரமான ஸ்பின்னர்களுக்கு இந்திய அணி போராடி வருகிறது. ரஞ்சி டிராபி போட்டிகளுக்கு அளிக்கப்படும் பிட்ச்கள் ஒரு காரணமாக இருக்கலாம். தற்போதைய பிட்ச்களில் நிறைய புல் வளர்க்கப்படுகிறது, இது ஸ்பின்னர்களுக்கு உதவாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து