முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் முடக்கத்திற்கு பிரதமர் மோடியே காரணம் காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் தற்போதைய மழைக்கால கூட்டத்தொடர் முடங்குவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம்(ஜூலை21) துவங்கி ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் எந்த வித நடவடிக் கைகளும் நடக்காமல் முடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் எ ந்த வித நடவடிக் கைகளும் நடக்கவிடாமல் காங்கிரசார் உள்ளிட்ட எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் ஐ.பிஎல் கிரிக் கெட் போட்டியில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லலித் மோடிக்கு உதவியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அன்னிய செலாவணி விதி மீறல் காரணமாக லலித் மோடிக்கு இந்தியாவில் தண்டனை அளிக்கப்படும் நிலை உள்ளது.இதனால் அவர் கடந்த 4ஆண்டுகளாக லண்டனில் தங்கியுள்ளார்.அவர் வெளிநாடு செல்வதற்கு பிரிட்டன் பயண ஆவணங்களை பெறுவதற்கு சுஷ்மா சுவராஜூவும் வசுந்தரா ராஜேவும் உதவியதாக கூறப்பட்டுள்ளது.இதனால் அந்த தலைவர்கள் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்விவகாரம் குறித்துபிரதமர் மோடி எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கிறார். பாஜ தலைவர்கள் மீது நடவடிக் கை எடுக்க முடியாது .ஆனால் அவர்களை பற்றி விவாதம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாஜக அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது,

பாராளுமன்றம் அமைதியாக செயல்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிநடவடிக் கை எடுக்க வேண்டும். சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீது பிரதமர் மோடி நடவடிக் கை எடுக்க வேண்டும். மத்திய பிரதேச மாநில தொழில்முறை தேர்வு வாரியம் (வியாபம்) அரசு ஊழியர்களை தேர்வு செய்வதற்கு தேர்வுகளை நடத்துகிறது.இந்த தேர்வில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இதனால் தகுதி இல்லாத நபர்கள் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ருக்கிறார்கள்.எனவே சிவராஜ் சிங் சவுகான் மீதும் நடவடிக் கை எடுக்க வேண்டும்.அவர்கள் மீது விவாதம் நடத்துவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது.இந்த விவாதத்தை நாங்கள் ஏற்க முடியாது.

ஊழல் நபர்களுக்கு துணைபோன பாஜக தலைவர்கள் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும்.தனது அதிகாரத்தை பயன்படுத்தி சுஷ்மா சுவராஜ் முறைகேடாக செயல்பட்டுள்ளார்.அவர் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும்.இந்த ஜூலை மாதம் 21ம் தேதியன்று துவங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எந்த வித அவை நடவடிக் கைகளும் நடக்காமல் முடங்கியிருக்கிறது. இதற்கு மோடியின் அடாவடித்தனமே காரணம் ஆகும்.சுஷ்மா சுவராஜ் மீதும் வசுந்தரா ராஜே மீதும் கட்டாயம் நடவடிக் கை எடுக்க வேண்டும்.மத்திய பிரதேச மாநில வியாபம் முறைகேடு மாநிலம் சார்ந்த பிரச்சினை அல்ல. பல மாநிலங்களைச்சேர்ந்த  மாணவர்கள் வியாபம் முறைகேடு தொடர்பாக மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.

பாராளுமன்றம் அமைதியாக நடக்க வேண்டும் என்பதை எதிர் கட்சிகள் விரும்புகின்றனஆனால் ஆளும் கட்சியில் உள்ள தலைவர்கள் எதிர் கட்சியினரை விமர்சிக்கிறார்கள் .இதனால் பாராளுமன்ற அவை நடவடிக் கைகள் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து