முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமங்களில் மதுக்கடைகள் திறக்க மாட்டோம்: அரியானா முதல்வர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

ஹிசார் - அரியானாவில் மதுக்கடைகளை கிராமப்புறங்களில் திறக்க விருப்பம் இல்லையென்றால் அனுமதி வழங்கப்பட மாட்டாது என அதன் முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கிராமப்புறங்களில் மதுக்கடைகளை திறக்க கிராம பஞ்சாயத்துகளுக்கு விருப்பம் இல்லை என்றால் அதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. இது தொடர்பாக கிராம பஞ்சாயத்துகள் தங்களது கோரிக்கைகளை மாநில அரசுக்கு தெரிவிக்கலாம்.

ஜனவரி 31ம் தேதிக்குள் பெறப்படும் கோரிக்கைகளை கொண்டு அடுத்த நிதியாண்டில் தங்களது கிராமத்தில் மதுக்கடைகளை அமைக்க விரும்பாத கிராமங்களுக்கு மது கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றார். இது தொடர்பாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஹிசாரில் நடைபெற்ற போது முதல்வர் மனோகர் லால் கட்டார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அனுமதி பெறாத கிராமங்களில் மது விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தின் போது பாஜ எம்எல்ஏ கமல் குப்தா எதிர்கட்சி எம்பி துஷ்யந்த் சவுதாலா, ஹிசார் மேயர் சகுந்தலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து