எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குர்தாஸ்பூர் (பஞ்சாப்): பஞ்சாப் - குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி எஸ்.பி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதி மூவரும் கொல்லப்பட்டதாக பஞ்சாப் போலீஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் மாநில முதல்வர் பாதல், இது மிகவும் கவலைக்குரியது. தீவிரவாதம் என்பது மாநிலத்தின் பிரச்சினை அல்ல. தேசிய அளவில் இதனை தடுப்பதற்கான கொள்கை தேவைப்படுகிறது என்றார். இந்தத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, நமது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதற்கே நாம் விரும்பும்போது, எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் அவ்வப்போது நிகழ்த்தப்படுவது ஏன் என்று தெரியவில்லை. நாம் முதலில் தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், தாக்கப்பட்டுள்ளோம். இதற்கு உரிய பதிலடியை நாம் தருவோம். இந்தத் தாக்குதல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதனிடையே, இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ. இருக்கக் கூடும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் கூறியுள்ளார். முன்னதாக, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் உதவியோடு, இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் விதமாக லஷ்கர்-இ-தாய்பா இயக்கத்தின் தளபதி மக்பூல் கான் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, ஜம்முவின் துணியால் பகுதியிலிருந்து ஊடுருவ முயற்சி மேற்கொண்டிருப்பதை புலனாய்வு கடந்த 24-ம் தேதி எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் வழியாக பஞ்சாப் செல்கின்ற அமிர்தசரஸ் - பதான்கோட் நெடுஞ்சாலையில் ஒரு காரில் அதிகாலை 5 மணியளவில் வந்திறங்கிய 3 மர்ம நபர்கள், பேருந்து ஒன்றில் பயணிகளை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்தத் தாக்குதலில் 4 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குர்தாஸ்பூர் காவல் துறை அதிகாரி குர்பிரீத் சிங் தெரிவித்தார்.
பின்னர், ராணுவ உடையில் இருந்த அந்த மர்ம நபர்கள், தினாநகர் காவல் நிலையத்துக்குல் புகுந்து, காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பின்னர், போலீஸாருக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டது. இதையடுத்து, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். இதனிடையே, பஞ்சாப் காவல் துறை உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறைச் செயலர் எல்.சி. கோயல் ஆலோசனை நடத்தி, நிலைமையை கண்காணித்து வருகிறார்.
அதே வேளையில், பதான்கோட் - குர்தாஸ்பூர் ரயில் பாதையில் 5 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் போலீஸார் தெரிவித்தனர். ராணுவ கமாண்டோக்கள், அதிரடிப் படையும் சம்பவ இடத்துக்கு விரைந்தது. பதான்கோட்டில் இருந்து வந்த ராணுவம், சம்பவம் நடந்த இடத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தாக்குதல் நடத்தியவர்களைத் தேடிப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வெடிகுண்டு நிபுணர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் என்ற சந்தேகிக்கப்படும், மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய தினாநகர் காவல்நிலையத்தில் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிள் 3 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அல்லது ஜெய்ஸ்-இ-மொகமத் அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.