முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கமணிக்கு கூடுதல் பொறுப்பு ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர், கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து செந்தில்பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளார். தொழில் துறை அமைச்சராக இருக்கும் பி.தங்கமணிக்கு கூடுதலாக போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த வி.செந்தில்பாலாஜியை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து போக்குவரத்து துறையை அமைச்சர் பி.தங்கமணிக்கு கூடுதலாக ஒதுக்கும்படி கவர்னருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிந்துரை செய்திருந்தார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவித்து போக்குவரத்து துறையை அமைச்சர் பி.தங்கமணிக்கு கூடுதலாக ஒதுக்கி கவர்னர் ரோசைய்யா அறிவித்துள்ளார்.

இனி பி.தங்கமணி தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். முதலமைச்சரும் அ தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா  வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும். வி.செந்தில்பாலாஜி இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை மாவட்டப் பணிகளை  நாமக்கல் மாவட்டச் செயலாளர், தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி கூடுதலாக மேற்கொள்வார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து