முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் 29 ம்தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு 29 ம்தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர்,உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு மாறுதல் 30 ம்தேதி அன்றும் காலை 10. மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பத்தவர்கள் மட்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறதுஇவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து