முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாம் மறைவு: கவர்னர் ரோசய்யா இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைவுக்கு தமிழக கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் திடீர் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மக்களின் ஜனாதிபதியாக விளங்கிய அவர், வளர்ச்சியையும், உத்வேகத்தையும் நோக்கி இளைஞர் சமுதாயத்தை செல்ல வைத்தவர். இந்த நாடு ஒரு சிறந்த மனிதர், தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, எளிமையும், பண்பும் மிகுந்த ஒரு நல்லவரை இழந்துவிட்டது.

சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அவர் அடிக்கடி வருகை தந்துள்ளார். அவரை நான் வரவேற்றும் உள்ளேன். அவரது சிறந்த பண்பும், அன்பும் அவருடன் என்னை மிகவும் நெருக்கமாக ஆக்கியது.அவரது மறைவு தமிழ்நாடு, இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைஞர் மற்றும் மாணவ சமுதாயத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. அவரது மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து