முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவி நாற்காலிக்கு தனி மரியாதை தேடி தந்தவர் அப்துல் கலாம் தமிழருவி மணியன் புகழாரம்

புதன்கிழமை, 29 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பதவி நாற்காலிக்கு தனி மரியாதையை தேடி தந்த தலைவர் என்று அப்துல்கலாமுக்கு தமிழருவி மணியன் புகழாரம் சூட்டியுள்ளார்.  இது குறித்து காந்திய மக்கள் கட்சித்தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

ஒருவரும் எதிர்பாராத நிலையில் டாக்டர் அப்துல் கலாம் மரணத்தைத் தழுவிய செய்தி இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. காந்தியப் பண்புகளின் வாழும் வடிவமாக நம்மிடையே வலம் வந்த இந்தியத் தாயின் இணையற்ற தவப்புதல்வர், சமய ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழ்ந்த மாபெரும் மனிதப் புனிதர், பதவி நாற்காலிக்குத் தனி மரியாதையைத் தேடித்தந்த அரிய தலைவர், நேருவுக்குப் பின்பு இந்திய இளைஞர்களின் இதய சிம்மாசனங்களில் இருக்கையிட்டு அமர்ந்தவர்,

ஏவுகணைகளை விண்ணில் அனுப்பி உலகத்தின் பார்வையில் இந்தியாவின் அறிவியல் சாதனைகளை உயர்த்திப் பிடித்தவர், எளிமை – ஏழ்மை – பணிவு ஆகியவையே ஓர் ஆண்மஞானியின் அடையாளங்கள் என்பதைத் தன் வாழ்வின் மூலம் வெளிப்படுத்திய தனிப்பெரும் தமிழர் அப்துல் கலாமை காலம் நம்மிடமிருந்து களவாடிச் சென்றாலும் அவர் விதைத்த கனவுகளும், அவர் படைத்த நூல்களும், அவர் உருவாக்கிய சாதனைகளும் நாளும் அவர் பெயரை நம் நினைவுகளில் நிழலாடச் செய்யும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து