எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு மதுரை வந்தது. மதுரை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு தமிழக கவர்கனர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா சார்பில் செல்லூர் ராஜூ, மத்திய அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர் அவரது உடல் ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டு மண்டபம் கேம்ப் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.
அதைதொடர்ந்து கலாமின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க மறைந்த தலைவருக்கு மரியாதை செய்தனர். ராமேஸ்வரமே கண்ணீர் கடலில் முழ்கியுள்ளது. மக்கள் வெள்ளத்தில் தீவு நகரமே திணறி வருகிறது. முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்த வருவதால் உச்சக்ட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடநத (ஜூலை 27) கல்லூரி விழா ஒன்றில் உரையாற்றி கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஷில்லாங் பெத்தானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்ததை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள கலாமின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அப்துல்கலாமின் உடல் டெல்லியிலிருந்து நேற்று காலை 8.15 மணிக்கு தனி விமானம் மூலம் அவரது உடல் ஏற்றப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இந்த தனி விமானம் நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தில் இருந்து கலாமின் உடல் இறக்கப்பட்டு ராணுவ வண்டியில் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா, மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், மனோஜ் பாரிக்கர், மேகாலயா முதல்வர் சண்முகநாதன்,தமிழக அரசின் தலைமை செயலாளர் ஞானதேசிகன், மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், முதல்வர் ஜெயலலிதா சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாநகராட்சி மற்றும் மேயர் ராஜன் செல்லப்பா, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி,போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், மாநகராட்சி கமிஷனர் கதிரவன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து அப்துல்கலாமின் உடல் அலங்கரிப்பட்ட ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டு பிற்பகல் 1.40 மணியளவில் புறப்பட்டு சென்றது.
ஹெலிகாப்டர் ராமநாதபுரம் அருகே உள்ள மண்டபம் கேம்பில் உள்ள மைதானத்திற்கு வந்து இறங்கியது. அங்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்தலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், சுந்தர்ராஜ், உதயகுமார், ராமநாதபும் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் மற்றும் அரசு அதிகாரிகள் அன்னாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன்பிறகு அங்கிருந்து சாலை மார்க்கத்தில் ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே உள்ள கிழக்காடு மைதானத்திற்கு மதியம் 2.45 மணியளவில் கொண்டுவரப்பட்டது. அந்த மைதானத்தில் பெரிய அளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் தேசிய கொடி போர்த்தப்பட்ட அப்துல்கலாமின் உடல் வைக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்சி தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று மலர் மாலைகள், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மக்கள் வரிசையாக செல்வதற்கு தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அப்துல்கலாமின் உடல் ராமேஸ்வரம் வந்ததினால் ராமேஸ்வரம் நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள், ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. ராமேஸ்வரம் நகரமே மயான அமைதியாக காணப்படுகிறது. மக்கள் முகத்தில் சோகமாக காட்சி அளிக்கிறார்கள். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அப்துல்கலாமின் உடல் இன்று இரவு 8 மணிக்கு மேல் அவரது அண்ணன் முத்துமுகமது மீரான் லெப்பை மரைக்காயர் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கும் ஏராளமான மக்கள் அப்துல்கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இரவு முழுவதும் லெப்பை மரைக்காயர் வீட்டில் அப்துல்கலாமின் உடல் வைக்கப்படுகிறது. இதையடுத்து இன்று காலை 8 மணியளவில் அவரது வீட்டின் அருகில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளி வாசலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு சிறப்பு தொழுகை நடத்தப்படுகிறது. இதையத்து 9 மணிக்கு மேல் அப்துல் கலாமின் உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வண்டியில் வைக்கப்பட்டு 7 கி.மீ.தூரம் உள்ள பேக்கரும்பு என்ற இடத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த இடம் தங்கச்சிமடம் பஞ்சாயத்துக்கு சொந்தமானது. 1.85 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
நாளை நடைபெறும் அப்துலம் கலாமின் இறுதி சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்தலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், சுந்தர்ராஜ், உதயகுமார், ராமநாதபும் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன், அன்வர் ராஜா எம்பி, முருகன் எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் இடத்தை பார்வையிட்டனர். அதை தொடர்ந்து அப்துல்கலாமின் உடல் நல்லடக்கம் செய்யும் இடத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.
ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் அப்துல்கலாமின் உடல் இன்று பிற்பகலில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அப்துல்கலாமின் உடல் ராமேஸ்வரம் வந்ததால் ராமேஸ்வரம் நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. மக்கள் முகத்தில் ஒரே சோகமயமாக காட்சி அளிக்கிறது. ராமேஸ்வரம் கண்ணீர் கடலில் முழ்கியுள்ளது.
கலாம் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பிரமாண்ட நினைவிடம் கட்டப்படுகிறது. இதற்கான இடத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. அங்கு நினைவிடம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மறைந்த தலைவர்களுக்கு நினைவிடம் அமைத்திருப்பது போல் இங்கு அப்துல் கலாம் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அப்துல் கலாம் இயற்கையை மிகவும் நேசிப்பவர் என்பதால் புல்வெளிகள், மரங்களுடன் கூடிய இயற்கை எழிலுடன் நினைவிடம் கட்டப்படுகிறது.
ஏவுகணை நாயகனான அப்துல்கலாமின் மறைவு நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது கடைசி மூச்சுவரை நாட்டிற்கு சேவை செய்த அந்த சரித்திர நாயகனின் உடல் நல்லடக்கம் நாளை ராமேசுவரத்தில் நடக்கிறது. அவரது மறைவையொட்டி, ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.
அவர்கள் அங்குள்ள அவரது உருவப்படத்துக்கு மலர் வைத்தும், தீபம் ஏற்றியும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் பொதுமக்கள் அணி அணியாக வந்து அஞ்சலி செலுத்துவதை காண முடிந்தது. ராமேசுவரத்தில் உள்ள கலாம் படித்த பள்ளி மாணவர்களும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி அஞ்சலி செலுத்தினர். ராமேசுவரத்தில் அரசியல் கட்சியினர், ஆட்டோ ஓட்டுனர்கள், மீனவர்கள், கூலித் தொழி லாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஜாதி, மத பேதமில்லாமல் தங்கள் மண்ணின் மைந்தன் என்ற பெருமையை நினைத்து அவரது வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள கலாம் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பங்கேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் கலாம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராமேஸ்வரம் புறப்பட்டார். நாளை (ஜூலை 30ம் தேதி) கலாம் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் கலந்துகொண்டு அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் இதில் பங்கேற்கிறார். இதற்காக இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் உம்மன்சாண்டி புறப்பட்டார். அவருடன் சபாநாயகர் சத்தன், எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் மற்றும் சில அமைச்சர்களும் செல்கிறார்கள்.
தனி விமானம் மூலம் மதுரை செல்லும் இவர்கள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பிறகு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து தனி விமானம் மூலம் கேரளா திரும்புகிறார்கள். அப்துல்கலாம் கேரளாவில் பல ஆண்டுகள் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் என்பதால் அவரது உடலுக்கு கேரள மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அப்துல்கலாமின் உடலை திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று உம்மன்சாண்டி பிரதமருக்கு கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடதக்கது. கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் இன்றும் நாளையும் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக கம்பு தடுப்புகள் போடப்பட்டு உள்ளன. இந்த ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா? என்று அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், உதயகுமார், சுந்தர்ராஜன், அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொதுமக்கள் வந்து செல்லும் வழி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியையும் அவர்கள் பார்வையிட்டனர். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க