முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாமை சந்திக்காமல் போய்விட்டேனே: சல்மான் கான் வருத்தம்

புதன்கிழமை, 29 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

மும்பை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். கலாம் மறைவை நினைத்து இந்திய மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இந்நிலையில் கலாம் பற்றி பாலிவுட் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் கூறுகையில்,

கலாம் சாபை சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் மீது நான் அன்பும், மரியாதையும் வைத்திருந்தேன்.ஒரு விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராக கலாம் பல தலைமுறை இந்தியர்களுக்கு உத்வேகமாக இருந்தார்.

கலாம் சாப் ஒரு சிறந்த ஆசிரியராக திகழ்ந்தார். அவர் கடைசியாக தனது ட்விட்டர் கணக்கில் ஐஐஎம் செல்வதாக தெரிவித்திருந்தார். யாரையாவது சந்திக்க வேண்டும் என்று உங்கள் இதயம் கூறினால் தாமதிக்காதீர்கள். கலாம் சாபை சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை சந்திக்க நான் முயற்சி செய்திருக்க வேண்டும்.  என்று சல்மான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து