முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானி சாகர் அணை இன்று திறப்பு முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களின் வாயிலாக முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று பவானி சாகர் அணையி்ல் இருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களின் வாயிலாக முதல்போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் ஈரோடு மாவட்டம், கோபி செட்டிப்பாளையம் அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து