முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ஒரே மாதத்தில் ரூ.3 கோடி வசூல்

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே கடந்த மாதம் 30-ந் தேதியில் இருந்து மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. இதில் தொடக்க நாள் அன்று ரூ.16.77 லட்சம் வசூல் செய்யப்பட்டது. தொடர்ந்து முதல் வாரக்காலத்தில் 3.26 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.1.08 கோடி வருவாய் கிடைத்தது.குறிப்பாக முதல் வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 1.56 லட்சம் பேர் பயணம் செய்ததில் ரூ.48.6 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது. அதுவும் பொதுமக்கள் மெட்ரோ ரெயிலை பார்ப்பதற்காக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகம் வருகை தந்தனர்.தொடர்ந்து வந்த நாட்களில் மழை போன்ற பல்வேறு காரணங்களால் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால் வசூலும் சற்று குறைந்தது. முதல் மாதத்தில் ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை வருவாய் கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது. சரியான தொகை எவ்வளவு என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும். முதல் மாதத்தில் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து