முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் நல அலுவலர் பணிக்கு விண்ணப்பம்

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2015      தமிழகம்

சென்னை, குழந்தைகள் நல அலுவலர் பணிக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான அறிவிப்பை முதன் முதலாக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை பணிகளில் அடங்கிய குழந்தைகள் நல அலுவலர் பதவியில் 89 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அந்தப் பதவிக்கு வரும் 20 ம்தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான கட்டணத்தை வரும் 22 ம் தேதிக்குள் வங்கிகள் மூலம் செலுத்த கடைசி நாள் ஆகும். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் 20 ம் தேதி கேள்குறி வகை வினாக்கள் மூலம் 2 தாள்களாக நடைபெறுகிறது.

பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள்ளும், மற்றவர்களுக்கு எவ்வித வயது வரம்பும் இல்லை. பி.எஸ்.சி. நர்சிங் அல்லது பி.எஸ்.சி. நர்சிங் (பொது) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தாள் ஒன்றில் நர்சிங் பட்டத்தில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்களும், தாள் 2 ல் பொது அறிவு, மனோத்த்துவம் ஆகியவற்றில் இருந்து 200 மதிப்பெண்களுக்கும், நேர்காணலுக்கு 70 மதிப்பெண்களும் என 570 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கான தேர்வுகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஆகிய இடங்களில் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து