முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குச்சந்தை முதலீட்டில் எல்.ஐ.சி ரூ.24,373 கோடி லாபம் ஈட்டியது

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      வர்த்தகம்
Image Unavailable

மும்பை,ஆக.-4, பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும், கடந்த 2014-15 நிதி ஆண்டில் இதன் மூலம் ரூ.24,373 கோடி லாபம் ஈட்டி இருக்கிறது. எல்ஐசிக்கு 2013-14-ம் நிதி ஆண்டில் பங்குச் சந்தை முதலீடு மீது ரூ.21,257 கோடி லாபமாக கிடைத்தது. இதனுடன் ஒப்பிடும்போது, 2014-15 நிதியாண்டில் சுமார் 15 சதவீத அளவுக்கு லாபம் அதிகரித்திருக்கிறது. 2014-15-ம் நிதி ஆண்டில் புதிதாக ரூ.7,328 கோடி மட்டுமே பங்குச் சந்தையில் எல்ஐசி முதலீடு செய்தது.

எல்ஐசி நிறுவனம் இப்போது பங்குச் சந்தையில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கிறது. பெரும்பாலான புளுசிப் நிறுவனப் பங்குகளில் கணிசமான பங்குகளை எல்ஐசி வைத்திருக்கிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி அரசு பத்திரங்களில் எல்ஐசி ரூ.10.35 லட்சம் கோடியை முதலீடு செய்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் மேலும் ரூ.3.75 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்