முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எளிதாக வெல்வோம்: கேப்டன் மேத்யூஸ் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு - இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டி தொடரில் இந்திய அணியை நாங்கள் எளிதாக வெல்வோம் என் இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டியில் பங்குபெறவுள்ளது. இதில் இருஅணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 2 ஆவது டெஸ்ட் போட்டி 20 ஆம் தேதி, 3 ஆவது டெஸ்ட் போட்டி 28 ஆம் தேதியில் நடக்கிறது. இப்போட்டிகளில் பங்குபெற கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி கொழும்பில் முகாமிட்டுள்ளனர். 

இந்நிலையில் போட்டி குறித்து இலங்கை கேப்டன் மேத்யூஸ் தெரிவிக்கையில், நாங்கள் இந்திய அணியை எளிதாக வெல்வோம் என்று கூறியிருந்தார். இதுபோல், முன்னாள் வீரர் ஜெயசூர்யா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  சமீபத்திய பாகிஸ்தான் தொடரில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. சில வீரர்களின் ஓய்வால் இதுபோன்ற தோல்விகள் அரங்கேறிவிட்டது. எனினும் இலங்கை அணியில் திறமையான வீரர்கள் பலர் இருப்பதால் இந்திய அணிக்கு இத்தொடர் மிகுந்த சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்