முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு, சரத்குமார் வாழ்த்து

வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2015      சினிமா
Image Unavailable

சென்னை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தொன்று தொட்டு உலக அளவில் தமிழர்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக அறிவுசார் பணிகளில் தமிழர்களின் பங்களிப்பு மிகப்பெரும் அளவில் இருந்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. பல்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு துறையிலும் தமிழர்கள் சாதனை புரிந்து வரலாறு படைத்திருப்பதோடு தமிழினத்திற்கே பெருமை கிடைக்கச் செய்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சென்னையில் பிறந்து வலைத்தள உலகின் சிகரம் தொட்டிருக்கும் சுந்தர் பிச்சை தனது 43 வயதில் நிகழ்த்தியிருக்கும் சாதனைக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மேன்மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி தமிழினத்திற்கும், தாய்நாட்டிற்கும் மேலும் பல சிறப்புகளைச் சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். சரித்திரப் புகழ் படைத்திருக்கும் சுந்தர் பிச்சையின் உழைப்பும், வளர்ச்சியும் இன்றைய இளைஞர் சக்திக்கு வழிகாட்டுதலாகவும், தூண்டுதலாகவும் அமையும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்