முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தில் 5 லட்சம் டாலர்கள் பணம்

திங்கட்கிழமை, 17 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் மலைப் பகுதியில் ஞாயிறன்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஐந்துலட்சம் அமெரிக்க டாலர்கள் வரையான பணத்தை எடுத்துச் சென்றிருந்ததாக இந்தோனேஷிய தபால் அலுவலகம் தெரிவிக்கிறது.
அரசாங்கத்தினால் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி பணம் நான்கு பைகளில் எடுத்துச் செல்லப்பட்டதாக பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜயபுராவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 கோடி).

விபத்திற்கு உள்ளான பயணிகள் விமானத்தில் அனைவரும் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்