முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் ஜெர்மனி பெண் கடத்தல்

செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அவ்வப்போது வெளிநாட்டினரை கடத்தி சென்று கொலை செய்கின்றனர்.
இந்த நிலையில் ஜெர்மனியை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று காபூல் நகரில் சேவைப்பணிகளில் ஈடுபட்டு வந்தது. இதன் பெண் ஊழியர் ஒருவர் வெளியே சென்றிருந்தார். அப்போது பட்டப்பகலில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள் அவரை மிரட்டி கடத்தி சென்றனர். அவர் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரை மீட்பதற்கு அரசு படைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

பெண் ஊழியரை கடத்தியது தொடர்பாக இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும் தலிபான்கள் தான் கடத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்