முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஆண்டு ஓய்வு பெற திட்டமிட்டதாக சாய்னா நெவால் தகவல்

புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு, உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாய்னா நெவால் தான் கடந்த ஆண்டே போட்டியிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய இடத்தை பெங்களூருக்கு மாற்றி விமல் குமார் பயிற்சியின் கீழ் ஆடியதுதான் தன் வாழ்நாளில் மிகப்பெரிய திருப்பு முனை என்கிறார். பெங்களூருக்கு மாறியது உண்மையில் உதவியது. மாற்றங்களை அனைவருமே கண்டிருப்பர். பெங்களூரு வந்த பிறகே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

என்னிடத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த இடமாற்றம். உலகின் நம்பர் 1 நிலையில் உள்ளேன். சீனா மற்றும் இந்தியா ஓபன் போட்டிகளில் வென்றேன். அனைத்து இங்கிலாந்து உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றேன், இவையெல்லாம் பெங்களூருக்கு வந்த பிறகுதான் நடந்தேறியது.

நான் பெரிய அளவுக்கு முன்னேற்றம் காண விரும்பினேன், அதனால் ஐதராபாத்திலிருந்து நகர்ந்தேன், விமல் அவர்களின் செல்வாக்கு ஒரு பெரிய மாற்றத்தை விளைவித்தது. என்னுடன் அவர் நீண்ட நேரம் மைதானத்தில் செலவிட்டதற்காக அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் நான் சாம்பியன், நான் நம்பர் 1 என்ற உணர்வு ஏற்பட்டது.

உடல்தகுதி அடிப்படையிலும் நான் நன்றாக உணர்கிறேன். விமல் குமார் எனது பலவீனங்களைக் கண்டுபிடித்து அதனைச் சரி செய்வதில் பெரும் பங்கு வகித்தார். கடந்த ஆண்டு எனது ஆட்டம் எனக்கே எரிச்சலை ஏற்படுத்தியதால் பேட்மிண்டனை விட்டே சென்று விடலாம் என்று கருதினேன். வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை என்னால் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்