முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி கேப்டன் டோணி பாராசூட்டிலிருந்து குதித்து சாதனை

புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி முதல் முறையாக பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, இந்திய ராணுவத்தில் கவுரவ பதவியில் உள்ளார். அவர் தனது ராணுவ பணிக்கான பயிற்சியை மேற்கொண்ட அவர், அதன் ஒருபகுதியாக பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டார். கடந்த 5ம் தேதி ஆக்ராவில் உள்ள பாராசூட் பயிற்சி பள்ளிக்கு வந்த அவர், தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு, உயர்மட்ட இந்திய ராணுவ பாராசூட் பிரிவு வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் ராணுவ வீரர்கள் உதவியுடன் முதல் முறையாக நேற்று பாராசூட்டில் இருந்து கீழே குதித்தார். ஆக்ரா விமான தளத்தில் இருந்து இந்திய விமானத்தில் சென்ற அவர் 1,250 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து சாகசம் செய்தார். அவர் 70 வினாடிகளில் கீழே இறங்கினார்.இந்த சாதனைக்காக கேப்டன் டோனியை ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்