எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் மறைவுக்கு இன்று தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மவுன அஞ்சலி செலுத்தினார்கள். சட்சபை நேற்று காலையில் கூடியது. அப்போது சபாநாயகர் தனபால் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார். இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் வருமாறு :–
‘‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’’ என்றும் ‘‘அணுசக்தி நாயகன்’’ என்றும் ‘‘தலைசிறந்த விஞ்ஞானி’’ என்றும் ‘‘திருக்குறள் வழி நடப்பவர்’’ என்றும் ‘‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’’ என்றும் போற்றப்படுபவரும் தன்னுடைய பொன்மொழிகளாலும் கவிதைகளாலும் எழுத்துக்களாலும் தனது எளிமை மற்றும் மென்மையான அணுகுமுறையினால் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவரும் நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தவரும் தமிழகத்தின் மண்ணின் மைந்தருமாகிய பன்முகத் தலைவர் ‘‘பாரத ரத்னா’’ டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் 27.7.2015 அன்று தனது 83-வது அகவையில் திடீரென மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
இராமேஸ்வரத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தமது கடின உழைப்பினாலும் ஒருமுக சிந்தனையாலும் விடா முயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசுத் தலைவராக விளங்கினார். தன்னம்பிக்கையைவளர்த்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் அதன் பின்னரும் அவரது சிந்தனை எப்பொழுதும் மாணாக்கர்கள், இளைஞர்கள் ஆகியோரைப் பற்றியே இருந்தது. 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டவர்.
இந்தியா வல்லரசாக உருவெடுக்க மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக ‘கனவு காணுங்கள்’ அது உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டுமென்றும் வெற்றிபெற வேண்டுமென்றால் பதட்டமில்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்தவழி என்றும் வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார். இளைய தலைமுறையினரும் மாணாக்கர்களும் இந்தியாவின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்காற்றிட உந்துசக்தியாக விளங்கினார்.
அன்னாரது பிறந்த தினம் ‘‘இளைஞர் எழுச்சி நாளாக’’ தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது நினைவைப் போற்றும் விதமாக ‘‘டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது’’ சுதந்திர தினத்தன்று தமிழக அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் செந்தூர் பாண்டியன்திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 2011-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவரும் விவசாய குடும்பத்தில் பிறந்து தன்னை இளம் வயது முதல் பொது வாழ்வில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்காக பணியாற்றியவரும் 1986 முதல் 1991 வரை கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினராகவும், 1996 முதல் 2001 வரை கடையநல்லூர் நகர்மன்ற துணைத் தலைவராகவும் திறம்பட பணியாற்றிய வரும் ஜூலை 2011 முதல் மே 2015 வரை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சராகவும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றியவரும் இனிய பண்பும் எளிமையும் தன்னகத்தே கொண்டவரும் அனைவரிடத்திலும் நட்புறவோடும், அன்போடும் பழகியவருமான பூ. செந்தூர் பாண்டியன் சிறிது காலம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 11.7.2015 அன்று தனது 64-வது அகவையில் மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. இசையமைப்பாளர்எம். எஸ். விஸ்வநாதன் மெல்லிசை மன்னர் என்றும் எம்.எஸ்.வி என்றும் அன்புடன் அழைக்கப்படுபவரும் தமிழ் திரையுலகில் மாபெரும் சகாப்தமாக திகழ்ந்தவரும் தனது ஈடு இணையற்ற இசை வல்லமையால் தமிழ் திரையுலகத்தினருக்கும் குறிப்பாக தமிழ்நாடு மக்களுக்கும் பெருமை சேர்த்தவரும் பழம்பெரும் இசை அமைப்பாளருமான திரையுலக இசை மேதை எம். எஸ். விஸ்வநாதன் 14.7.2015 அன்று உடல்நலிவுற்று மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
எம்.எஸ். விஸ்வநாதன் அன்பும் அடக்கமும் எளிமையும் இறை பக்தியும் உள்ளவர். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராரும் கடலுடுத்த பாடலுக்கு மோகன ராகத்தில் இசை அமைத்து தமிழர்களின் இதயத்தில் குடிகொண்டு, அனைவராலும் போற்றப்படும் இசையமைப்பாளர் ஆவார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரை உலக நண்பர்களுக்கும் ரசிக பெருமக்களுக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறி சபாநாயகர் தனபால் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார்.
அதைத்தொடர்ந்து மறைந்த பெருமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.