முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசியில் மின் பகிர்மான வட்டம்: சரத்குமார் நன்றி

புதன்கிழமை, 26 ஆகஸ்ட் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லையில் உள்ள மின் பகிர்மான வட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியில் புதிய மின் பகிர்மான மையம் அமைக்க இருப்பது வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதும் ஆகும். அதே போன்று புதுக்கோட்டையில் புதிய மருத்துவ கல்லூரி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தரம் மேம்படுத்துதல், தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் இலவச பரிசோதனை வாய்ப்பு, முக்கிய அரசு மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வசதிகள் என பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்