முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாசல பிரதேச முதல்வரிடம் சிபிஐ விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை

வியாழக்கிழமை, 27 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - அருணாசல பிரதேச முதல்வரை சிபிஐ அமைப்பு விசாரணை செய்வதற்கு குவாஹாட்டி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2006ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, நபம் டுகி, அருணாசல பிரதேச அரசின் பல ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி ஊழல்கள் செய்தார் என்று வழக்கு தொடரப்பட்டது.

தற்போது அவர் அம்மாநில முதல்வராக உள்ளார். அந்த ஊழல் வழக்குகள் தொடர்பாக நபம் டுகியிடம் விசாரணை நடத்த சிபிஐ அமைப் புக்கு கடந்த 21ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமலேயே, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், எனவே அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியும், சுப்ரீம் கோர்ட்டில் நபம் டுகி மனு தொடர்ந்திருந்தார். அந்த மனு நேற்று முன்திம் விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தது. மேலும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சிபிஐ அமைப்புக்கு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்