முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ஔரங்கசீப் சாலைக்கு விரைவில் அப்துல் கலாம் பெயர்

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - தலைநகர் புதுடில்லியில் உள்ள ஔரங்கசீப் சாலை, விரைவில் ‘ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சாலை'என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக டெல்லி நகராட்சிக் கவுன்சில் வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுபற்றி நகராட்சி துணைத் தலைவர் கரண் சிங் தன்வார் கூறியதாவது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு புகழஞ்சலி செலுத்தி அவரை கவுரவிக்கும் வகையில், டெல்லி ஔரங்கசீப் சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன. இந்த விவகாரம் நேற்று நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

அப்போது, அப்துல் கலாம் பெயரை சூட்டுவதற்கு அனுமதி அளிப்பது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலிடம்தான் இதற்கான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே, வேறு சட்டரீதியான அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறினார். இக்கூட்டத்தில் நகராட்சிக் கவுன்சில் உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்துகொண்டார். ஔரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயரை சூட்ட முடிவு செய்தமைக்கு கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுயிருந்த பா.ஜ.க எம்.பி. மகேஷ் கிரியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியா கேட் அருகே உள்ள தாஜ் மான்சிங் ஹோட்டலில் இருந்து ஆரம்பிக்கும் ஔரங்கசீப் சாலை, பிரதமர் இல்லம் அருகில் உள்ள சப்தார்ஜங் சாலையில் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்