முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி மருத்துவக்கல்லூரியில் சேர முடியாமல் தவித்த மாணவருக்கு ரூ 50 ஆயிரம் நிதி உதவி

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மேலான ஆணைப்படி, புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு சுண்டாங்கி வலசை கிராமத்தைச் சேர்ந்தஏழை மாணவன் தினேஷ்குமார் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்வி பயில்வதற்கு கல்லூரிக் கட்டணம் உட்பட ரூ 50 ஆயிரம் வழங்கப்பட்டது. இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி,தெற்கு சுண்டாங்கி வலசை கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா என்பவர், தனது மகன்தினேஷ்குமார் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பதற்கு இடம்கிடைத்துள்ளதாகவும், குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலை காரணமாக கல்லூரிக் கட்டணத்தைச்செலுத்துவதற்கு மிகவும் கஷ்டப்படுவதாகத் தெரிவித்து, தனது மகன் படிப்பதற்கு நிதியுதவிவேண்டி அதிமுக பொதுச் செயலாளரும் , முதல்வருமான ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

எந்த ஒரு மாணவ, மாணவியரும் கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா , சகுந்தலாவின் கோரிக்கையைதாயுள்ளத்தோடு பரிசீலித்து, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்துகல்லூரிக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு ஆணையிட்டிருந்தார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், தெற்கு சுண்டாங்கிவலசை கிராமத்தைச் சேர்ந்த மாணவன் தினேஷ்குமாரிடம் முதலாம் ஆண்டு கல்லூரிக்கட்டணம் உட்பட அத்யாவசிய செலவுகளுக்கும் சேர்த்து மொத்தம் 50,000/- ரூபாய்வழங்கப்பட்டது.

தங்களுடைய குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையை அறிந்து மருத்துவப் படிப்புபடிப்பதற்கு தாயுள்ளத்தோடு நிதியுதவி வழங்கிய, தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவன் தினேஷ்குமார், அவருடைய தாயார் சகுந்தலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தங்களது நன்றியை நெஞ்சம் நெகிழ தெரிவித்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்