முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ 28 லட்சம் செலவில் அரசு கட்டடங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சிவகாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி,அங்கன்வாடி மைய கட்டிடம், கலையரங்க கட்டிடங்களைசெய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்.கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்சாலை அமைத்தல், அங்கன்வாடி மையம் கட்டுதல், நியாய விலைக்கடை கட்டிடம் கட்டுதல்,கலையரங்கம் கட்டுதல், சுகாதார வளாகம் அமைத்தல் போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளபட்டி ஊராட்சி, நேரு காலனியில் ரூ.8 லட்சம்மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினையும், பூலாவூரணி ஊராட்சியில்ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினையும், விளாம்பட்டியில்ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிமையத்தினையும், கிச்சநாயக்கன்பட்டியில்ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினையும், மாரனேரியில்ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினையும் மாண்புமிகு செய்தி மற்றும்சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்.டி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர். வசந்தா அழகர்சாமி, சிவகாசி ஒன்றிய குழுத்தலைவர்.சி.சுப்பிரமணியம், துணைத்தலைவர்.சுடர்வள்ளி சசிக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வி.ஆர்.கருப்பசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள்.முருகேஸ்வரிபலராமன்,.இரா.குமார், .எஸ்.பாலன், நா.சீனிவாசன், வெ.சத்தியபாமா, வட்டாரவளர்ச்சிஅலுவலர்.வௌ்ளைச்சாமி, பொறியாளர் .நாராயணசமி உட்பட அரசுஅலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்