முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் ரூ. 5 கோடி போதைப் பொருள் சிக்கியது

ஞாயிற்றுக்கிழமை, 30 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக. 31– மலேசியாவுக்கு பார்சலில் அனுப்பப்படவிருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, பார்சலை அனுப்ப முயன்றது யார் என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் அனுப்புவதற்காக வந்த சரக்கு பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ரசாயனக் கலவை என்று எழுதப்பட்டிருந்த பெரிய பார்சலில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 25 கிலோ போதைப் பொருள் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சரக்கு பிரிவில் இருந்த கண்காணிப்பு கேமராவில் சந் தேகப்படும் வகையில் 3 இளைஞர்களின் உருவம் பதிவாகி யுள்ளது. அந்தக் காட்சிகளை வைத்து, போதைப் பொருளை மலேசியாவுக்கு அனுப்ப முயன்றவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்