எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு: 1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கொழும்பு டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான நேற்று 386 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இலங்கை 268 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. முன்னதாக 1993-ல் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, இலங்கை மண்ணில் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது விராட் கோலி தலைமையில் 2-1 என்று வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் 2011-ல் மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பிறகு இப்போது டெஸ்ட் தொடரை அயல்நாட்டில் கைப்பற்றியது இந்தியா.
சதம் எடுத்த புஜாரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அஸ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் அபாரமாக விளையாடி 110 ரன்கள் எடுத்து இசாந்த் சர்மாவின் 200-வது டெஸ்ட் விக்கெட்டாக வீழ்ந்தார். அவர் இசாந்த்தின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இடையில் மேத்யூஸ், அறிமுக விக்கெட் கீப்பர் குசால் பெரேரா (70) இணைந்து மிகச்சிறப்பாக ஆடி 135 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். குசால் பெரேரா 106 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய வீரர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு கவனம் சிதறினார்.
இதனையடுத்து தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் அஸ்வின் பந்தை கோபத்தில் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு மேத்யூஸ் 110 ரன்களில் அவுட் ஆக, ஹெராத் இறங்கி 2 பவுண்டரிகள் அடித்தார். அதுவும் யாதவ் பந்து வீச்சில் அதன் பிறகு அஸ்வினின் ஒரே ஓவரில் ஹெராத், தம்மிக பிரசாத் இருவரும் ஆட்டமிழந்தனர்.
கடைசியில் நுவான் பிரதீப் விக்கெட்டை அமித் மிஸ்ரா வீழ்த்த இலங்கை தேநீர் இடைவேளை முடிந்து எடுக்கப்பட்ட புதிய பந்தில் விறுவிறுவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 268 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் இசாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். வெற்றி பெற்ற இந்திய அணியின் மற்ற வீரர்கள் கரகோஷம் எழுப்ப புஜாரா, இசாந்த் வழிநடத்தி ஓய்வறைக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.
புஜாரா அருமையான சதம் எடுக்கவில்லையெனில் இந்த வெற்றி சாத்தியமில்லை. அதே போல் இசாந்த் சர்மா 5/54 என்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இலங்கையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசும் சிறந்த பந்து வீச்சாகும். 2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபார பந்து வீச்சு, இந்திய பேட்டிங் இணைந்து வெற்றியை ஈட்டித் தந்தது. 3-வது டெஸ்ட் போட்டி புஜாரா, இசாந்த் சர்மா, மற்றும் 2-வது இன்னிங்சில் கோலிக்குப் பிறகு அபார பேட்டிங் செய்த பின்வரிசை வீரர்கள் என்று ஒரு அணியாக இந்த வெற்றி சாதிக்கப்பட்டுள்ளது.
அணி வீரர்களுக்கு கோஹ்லி புகழாரம் முதல் போட்டியில் தோற்று மீண்டு வந்து டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றது பெரிய சாதனையென்றும், இந்த புகழ் இந்திய அணி வீரர்களுக்கு சென்றடைய வேண்டும் என்று கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோஹ்லி கூறியது: முதல் போட்டியில் தோற்ற அதிர்ச்சியில் இருந்து மீண்டு அடுத்தடுத்த போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது பெரிய சாதனை. இச்சாதனை முன்பு நிகழ்த்தப்படவில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன். இந்த வெற்றியின் புகழ், அணி வீரர்களை சென்று சேர வேண்டும்.
3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறாத வருண் ஆரோன், புவனேஸ்வர், ஹர்பஜன் போன்றோரும் வெளியில் இருந்து எங்களுக்கு ஊக்கம் கொடுத்தனர். அவர்களுக்கும் வெற்றியில் பங்கு உண்டு.இளம் வீரர்களை கொண்ட ஒரு அணியை வைத்து வரலாற்றை உருவாக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு வீரருமே தங்களுக்கென்று ஒரு இடத்தை பிடிக்க முயலுகின்றனர்.வீரர்கள் அடிக்கடி காயத்தால் விலகியது எரிச்சலை கொடுத்தது.
இருப்பினும், அணி வீரர்களும், அணி நிர்வாகமும் அதை சமாளித்த விதம் புத்திசாலித்தனமானது. மாற்று வீரராகத்தான் புஜாரா களம் புகுந்தார். ஆனால் போட்டியின் முடிவை மாற்றும் ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். கஷ்டம் என்று நினைக்காமல், இதை ஒரு வாய்ப்பாக கருதி புஜாரா ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுபோன்ற மனநிலையைத்தான் உருவாக்க வேண்டும். இலங்கை வீரருடன் இந்திய வீரர்கள் வாக்குவாதம் இந்திய வீரர்களுடன், இலங்கை வீரர் குஷால் பெரேரே வாக்குவாதம் செய்ததால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய வீரர் அஸ்வின் குறுக்கிட்டு பெரேராவை சமாதானம் செய்து வைத்தார்.
அஸ்வின் பந்து வீச்சை ரிவர்ஸ் ஸ்வீப் வகை ஷாட் அடிக்க முயன்ற பெரேரா, ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.கேட்சை பிடித்த மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா, கையில் பந்தை வைத்துக்கொண்டு, தவளைபோல தவளைபோல துள்ளியபடி மகிழ்ச்சியுடன் வந்தார். இதைப்பார்த்த, இந்திய வீரர்களும் சிரித்து மகிழ்ச்சி கோஷமிடவே, பெரேரா கோபத்தில் கண்டபடி பேச ஆரம்பித்தார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அஸ்வின் வந்து தலையிட்டு பெரேராவை வெளியே போகும்படி சைகை காட்டினார். மீண்டும் பெரேரா அதுபோலவே பேசியபோது, முதுகில் தட்டிக்கொடுத்து அவரை தள்ளிவிட்டார் அஸ்வின்.இதனால் சிறிது நேரம், பரபரப்பு நிலவியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.