எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை - ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேரின் போலீஸ் காவல் வரும் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மைக்கேல் போராவை கொல்ல முயன்றதாக இவர்கள் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் இந்திராணியிடம் இதுவரை 90 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷ்யாம் ராய் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷீனா போராவை இந்திராணியும் அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணாவும் கொலை செய்ததும் அதற்கு அவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இந்திராணி 25-ம் தேதியும், சஞ்சீவ் கண்ணா 26-ம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரையும் கர் காவல் நிலைய போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து இந்திராணி உள்ளிட்ட மூவரையும் பாந்ரா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சந்த்கடே முன்பு போலீஸார் திங்கட்கிழமை ஆஜர்படுத்தினர்.
அப்போது, இந்திராணி மற்றும் கண்ணா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குஞ்சன் மங்களா மற்றும் ரிஷிகேஷ் ஆகியோர் அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஷீனாவின் செல்போன் மற்றும் அவரது உடை களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர். மேலும் இந்தக் கொலையில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு வெளியே உள்ள மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். எனவே, இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் மூவரின் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று போலீஸார் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மூவரின் போலீஸ் காவலை வரும் 5-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, தன்னையும் கொல்ல முயன்றதாக ஷீனாவின் சகோதரர் மைக்கேல் போரா குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திராணி உள்ளிட்ட மூவர் மீதும் மேலும் ஒரு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக அசாமில் வசித்து வரும் அவரது சகோதரர் மைக்கேல் போராவிடமும் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையின்போது, ஷீனா கொல்லப்பட்ட அதே நாளில், ஓட்டலில் தங்கி இருந்த எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டுச் சென்றனர். ஆனால் அவர்கள் திரும்பி வருவதற்குள் மயக்கம் தெளிந்ததால் தப்பிச் சென்றுவிட்டேன். இல்லாவிட்டால் என்னையும் கொலை செய்திருப்பார்கள்” என்று அவர் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வொர்லி பகுதியில் உள்ள இந்திராணி, பீட்டர் முகர்ஜியின் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் ஒரு சூட்கேஸை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அதில் மைக்கேலை கொலை செய்வதற்கான திட்டம் தொடர்பான ஆவணம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சஞ்சீவ் கண்ணா மற்றும் கார் ஓட்டுநர் ஷ்யாம் ராய் ஆகிய இருவரையும் ஷீனாவின் சடலத்தை எரித்த ராய்கட் வனப் பகுதிக்கு அழைத்துச் சென்ற போலீஸார், சம்பவத்தை நடித்துக் காட்டச் செய்தனர். முன்னதாக, சனிக்கிழமை நேருக்கு நேர் நடைபெற்ற விசா ரணையின்போது ஷீனா கொலை தொடர்பாக இந்திராணியும், சஞ்சீவ் கண்ணாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர். இதற்கிடையே இந்திராணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஷீனா அமெரிக்காவில் உள்ளதாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இந்திராணியின் முதல் கணவர் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி முகர்ஜியில் முதல் கணவர் சித்தார்த் தாஸ். பணத்தாசை, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுவர் இந்திராணி என அவரது முதல் கணவர் சித்தார்த் தாஸ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் இந்திராணி கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே வங்கதேசம் போய் விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஷீனாவின் கொலை வழக்கில் புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சித்தார்த்தும், இந்திராணியும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனபோதும் கணவன், மனைவியாக 1989-ம் ஆண்டு வரை வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஷீனாவும், மிக்கயில் போராவும். சித்தார்த்தைப் பிரிந்த பின்னர் சஞ்சீவ் கன்னாவைத் திருமணம் செய்து கொண்ட இந்திராணி, பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து பீட்டர் முகர்ஜியைத் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.