முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக கீழணை, வீராணம் ஏரி இன்று திறப்பு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரி இன்று முதல் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:

கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசனபகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர்திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குகோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின்வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்துசாகுபடிக்காக 3.9.2015 முதல் தண்ணீர் திறந்து விடநான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில்உள்ள 1,31,903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதைநான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்