முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் ராகிங் கொடுமையால் ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் - தெலுங்கானா மாநிலலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ராகிங்கால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த வி.சாய்நாத் என்ற மாணவன் வாராங்கல் மாவட்டத்தில் சி.எம்.ஆர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை கல்லூரியின் மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்த மாணவன் சாய்நாத் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ராகிங்கை நிறுத்துங்கள் மேலும் இந்த நிலமைக்கு காரணம் மூத்த மாணவர்கள் அப்படி செய்திருக்க கூடாது என்றும் எழுதியுள்ளார். ஆனால் அந்த மாணவர்கள் யார் என்று அந்த குறிப்பில் தெளிவாக இல்லையென இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

நாங்கள் ராகிங் தொடர்பாக எந்த புகாரையும் பெறவில்லை, இருந்தபோதிலும் இந்த மரணத்திற்கு பின்னனி ராகிங்கா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகிறோம் என துணை காவல் ஆணையர் அசோக் குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago