எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை தீவுத்திடலில் செயற்கை இசை நீரூற்று அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கூடுலாக நலிந்த கலைஞர்கள் 500 பேருக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதி உதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல்களை சட்டசபையில் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் இன்று கூறினார்.
சட்டசபையில் நேற்று சுற்றுலா பண்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அந்த விவாதத்திற்கு பதில் அளித்து, அத்துறையின் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வௌியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
சென்னையில் ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதி நேர கலை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தினை ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாகவும், மாவட்ட விரிவாக்க மன்றங்களில் பணியாற்றும் பகுதி நேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தினை ரூ.1,500 லிருந்து ரூ.3 ஆயிரமாகவும், ஊரக ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதி நேர கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலகர்கள் ஆகியோரின் தொகுப்பூதியத்தினை ரூ.1000லிருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்த முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டிருக்கிறார். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.39 லட்சத்து 54 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை, மதுரை, கோவை, திருவையாறு அரசு இசை கல்லூரிகளில் அலுவலக பயன்பாட்டிற்கும், மாணவர்களின் பயன்பாட்டிற்கும் பல்கலைக்கழக தேர்வுகள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கும், புதிதாக ஜெராக்ஸ் யந்திரங்கள் வாங்குவதற்கும் தொடரா செலவீனமாக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனரின் அலுவலக பயன்பாட்டிற்கு ஒரு புதிய பொலீரோ கார் வாங்கிட ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயதான கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 2015–16ம் ஆண்டில் கூடுதலாக 500 நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்குவதற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மகாபாரதம், ராமாயணம், பாகவதம் போன்றவற்றிலிருந்து ஏதேனும் ஒன்றை மைய பொருளாக வைத்து வர்ண களஞ்சியம் என்ற தலைப்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் கலை விழாவினை நடத்திட ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தொன்மை சிறப்புமிக்க தோல்பாவை கூத்து, பொம்மலாட்டம் ஆகிய கலைகளை பாதுகாக்கும் பொருட்டும், அதில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்து அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடைய செய்யவும், அக்கலைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பயிற்சி அளிப்போருக்கு மதிப்பூதியம், பயிற்சி பெறுவோருக்கு நிதி உதவி மற்றும் பொம்மைகள், தோல் பொம்மைகள் வாங்குவதற்கு நிதி உதவி உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கருத்தாழமிக்க கலைகள் சார்ந்த தகுதியுள்ள நூல்களை பதிப்பிக்க நூலாசிரியர்களுக்கு நிதி உதவி, நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் 5 நூல்களை பதிப்பிக்க தொடரா செலவீனமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை அரசு அருங்காட்சியகத்தின் உலகப் புகழ் பெற்ற படிம காட்சி கூடத்தில் 2003ம் ஆண்டு ஜெர்மானிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சி பெட்டிகளை வடிவமைத்து படிமங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அக்காட்சி பெட்டிகளில் உள்ள மின்னொளி அமைப்புகளுக்கு மாற்றாக நவீன எல்இடி மின்னொளி அமைப்புகள் அதற்கான பேனல்களுடன் மாற்றி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவை தற்கால ஓவியங்கள் மற்றும் ராஜா ரவிவர்மா ஓவியங்கள் காட்சி அமைக்கப்பட்டுள்ள வளர் கலை கூடத்திலும் நிறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி படிம கூட காட்சி பெட்டிகளை நவீனப்படுத்த ரூ.30 லட்சமும், வளர் கலை கூட காட்சி பெட்டிகளுக்கு ரூ.20 லட்சமும் ஆக மொத்தம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
திருவள்ளூர் நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பட்டறை பெரும்புதூரில் ஓடுகின்ற கொசஸ்தலை ஆற்றின் அருகே உள்ள ஆனைமேடு, இருளந்தோப்பு கிராம நத்தம் ஆகிய பகுதிகளில் பண்டை மக்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றின் தொடக்கக் கால சான்றுகளாக மணல் திட்டுகளில் தொல்லியல் எச்சங்களான கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், கறுப்பு நிற பானை ஓடுகள் வரலாற்றின் தொடக்க காலத்தை சேர்ந்த தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் இவ்வூரின் கோவில்களில் பழமை வௌிப்படுத்தும் முக்கியமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை பல்லவர், சோழர், விஜயநகர பேரரசுகளை சார்ந்தவை ஆகும். எனவே தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரில் வாழ்ந்த பண்டை தமிழ் மக்களின் சமூக பொருளாதாரம், அரசியல் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றினை வௌிகொணர முதல்வர் ஜெயலலிதா தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை புராதன நினைவு சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு என்னும் 6 வார கால குறுகிய பயிற்சியை கோவில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த 44 பொறியாளர்களுக்கு 2 அணிகளாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு ரூ.24 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியானது பண்டை கோவில்களை தொல்லியல் உதவியோடு பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு செய்வதற்கு பொறியாளர்களுக்கு மிக பயனுடையதாக அமைந்தது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் 2015–16ம் நிதி ஆண்டிலும் இப்பயிற்சியினை இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் சுமார் 40 பொறியாளர்களுக்கு புராதான நினைவு சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு என்னும் பயிற்சி 6 காலத்திற்கு அளிக்க ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
மேலே சொன்னது போல இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை புராதான நினைவு சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு என்னும் 6 வார கால குறுகிய பயிற்சியை கோவில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த 44 பொறியாளர்களுக்கு 2 அணிகளாக அளிக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறையில் கோவில் கட்டிடங்கள், ஓவியங்கள் பாதுகாத்தல், கோவில்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு செயல்களில் தினசரி நடவடிக்கைகளில் நேரடி தொடர்பு கொண்டு பணியாற்றி வரும் 50 செயல் அலுவலர்களுக்கு புராதான நினைவு சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு என்னும் பயிற்சி 4 வார காலத்திற்கு அளிக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இதுவரை 39 இடங்களில் அகழாய்வு செய்து கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை அகழ் வைப்பகங்களில் காட்சிப்படுத்தி உள்ளது. இந்த அகழ் வைப்பகங்கள் அப்பகுதி அரசியல் பண்பாடு தொடர்பானவற்றை வௌிகாட்டுகிறது. முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரை திருமலைநாயக்கர் மகால் அகழ் வைப்பகம், தஞ்சாவூர் ராஜராஜன் அகழ் வைப்பகம், ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அகழ் வைப்பகம், தரங்கம்பாடி டேனீஸ் கோட்டை அகழ் வைப்பகம், சென்னை தலைமை செயலக அகழாய்வு காட்சிக்கூடம் ஆகியவற்றில் உள்ள தொல் பொருட்கள், அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள் உள்ளூர் வரலாறு, வரலாற்று சின்னங்கள் ஆகியவற்றினை நவீன எல்இடி டி.வி., இன்வெர்ட்டர், ஊடக கருவிகள், தேவையான உள் கட்டமைப்பு மற்றும் தேவையான உபகரணங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கூறினார்.
மேலும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வரலாற்று சிறப்பு மிக்க சிதம்பரத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி சுற்றுலா பயணியர் தங்கும் விடுதி, சுற்றுலா வரவேற்பு மையம் ஒன்று கட்டுவதற்கு ரூ.7 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்படும்.
இயற்கை எழில்மிகுந்த சூழலில் அமையப்பெற்றுள்ள தர்மபுரி மாவட்ட ஒகேனக்கல்லில் வருகை புரியம் சுற்றுலா பயணிகள் நலன் கருதி சுற்றுலா பயணியர் தங்கும் விடுதி கட்டுவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆசியாவின் மிக நீளமான மெரீனா கடற்கரையின் அருகில் அமைந்துள்ள சென்னை தீவுத்திடலில் ஆண்டு முழுவதும் முக்கிய பொருட்காட்சிகள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. எனவே இந்நிகழ்ச்சிகளை காண வரும் பல்லாயிரகணக்கான சுற்றுலா பயணிகளையும், அதிகம் மகிழுட்டுவதற்காக சுற்றுலா மேம்பாட்டின் ஒரு மைல் கல்லாக விளங்கும் வண்ணம் செயற்கை இசை நீரூற்று சென்னை தீவுத்திடலில் நிறுவ முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.