முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருங்குழி – செங்கல்பட்டு இடையே அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்டம்

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையே இரட்டை அகலப்பாதை அமைக்கும் பணி பல்வேறு கட்டங்களாக நடைப்பெற்று வந்தன. இந்த பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.கருங்குழி – செங்கல்பட்டு இடையே மட்டும் பணிகள் நிறைவடையாமல் இருந்தன. தற்போது அங்கும் இரட்டை அகலப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.இந்த பாதையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சோதனை நடத்திய பின்னர் ரெயில் போக்குவரத்து தொடங்க உள்ளது. பாதுகாப்பு ஆணையர் மிட்டல் அந்த பாதையில் நாளை ஆய்வு செய்கிறார்.பாதுகாப்பு கமிஷனருடன் அதிகாரிகள் குழு அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்டத்தை நடத்துகின்றனர். நாளை பிற்பகல் 3.40 மணி முதல் 4.10 மணி வரை இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.அந்த நேரத்தில் பொது மக்கள் யாரும் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று தெற்கு ரெயில்வே எச்சரித்துள்ளது. இந்த ஆய்வுக்கு பின் இரட்டை அகலப்பாதையில் ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்க உள்ளது.இதனால் ரெயில் தாமதம் ஏற்படாமல் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்