முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹரியானாவில் உலகின் மிகப் பெரிய புத்தகம் உருவாக்கி கின்னஸ் சாதனை

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

போபால் - ஹரியானா மாநிலத்தில் 96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது. ஹரியான மாநிலம் ஃபாரீதாபாத்தில் சமண மதத்தைச் சேர்ந்த துறவி முனி ஸ்ரீ தருண் சாகரின் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் 2,000 கிலோ எடையில், 33 அடி உயரம், 22 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 96 மணி நேரத்தில் புத்தகத்தை உருவாக்கும் பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. உலகின் மிகவும் சிறிய பெண்ணான நாக்பூரைச் சேர்ந்த ஜோதி ஆம்கே இந்த புத்தகத்தை வெளியிடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்