முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோலாம்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் சட்டவிரோதமாக தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கோலாம்பூரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கி சோதனை நடத்தினர். அப்போது அவர் 2 கிலோ தங்க கட்டிகளை தனது உடலில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள் தங்க கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்