முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீனா போராவின் டைரி மும்பை போலீசாரால் கண்டெடுப்பு: திடுக்கிடும் தகவல்களால் அம்பலம்

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - மும்பை காவல் துறையிடம் ஷீனா போராவின் டைரி கிடைத்துள்ளது இதில் பல்வேறு திtடுக்கிடும் தகவல்களை ஷீனா போரா குறிப்பிட்டுள்ளார். மிகவும் தெளிவான கையெழுத்தில் உள்ள அந்த டைரியில் எல்லா பக்கங்களில் இருந்தும் என்னை மன அழுத்தங்கள் சூழ்ந்துள்ளது. எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. எனது அம்மாவை நான் வெறுக்கிறேன் அவள் தாய் அல்ல அவள் ஒரு சூனியம் என ஷீனா அந்த டைரியில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஊடக நிர்வாகியான இந்திராணி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

ஷீனா கொலையில் உடந்தையாக இருந்த இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்ஜீவ் கன்னாவின் கொல்கத்தா வீட்டில் சோதனையிட்டபோது இந்த டைரி கிடைத்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்திராணி காவல் துறை விசரணையில் ஷீனா இறந்துவிட்டார் எனவும் அமெரிக்காவில் இருப்பதாகவும் மாறிமாறி கூறிவருகிறார் எனவும் ஷீனா கடைசியாக 2012 ஏப்ரல் 24 மர்மமாகியுள்ளார்.

இந்திராணி, சஞ்ஜீவ் கன்னா, இந்திராணியின் ஓட்டுனர் ஆகியோரால் ஷீனா கொலை செய்யப்படுள்ளார் என காவல் துறை கூறுகிறது. மேலும் ஷீனா போராவின் டைரி காவல்துறையிடம் சிக்கிய பிறகு இந்த வழக்கு விசாரணை மேலும் சூடுபிடித்துள்ளது. மேலும் விசாரணையில் பல அதிச்சி தகவல் வெளியாகலாம் என எதிபார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்