முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணைக்கு ஒத்துழைப்பவரை கைது செய்யக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - வழக்குகளில் விசாரணைக்கு ஒத்துழைப்பவரை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.உரிய வகையில் ஒத்துழைக்கும் நபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதை தவிர்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் நாரிமன் அடங்கிய அமர்வு உத்தரவில், குறிப்பிட்ட வழக்கு குறித்த விசாரணையில் உரிய தகவல்களை தந்து விசாரணைக்கு ஒத்துழைப்பவரை தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது.ஏனெனில், ஒரு நபரின் கைது என்பது அவரை மட்டுமின்றி அவரின் குடும்பத்தையும் சேர்த்தே பாதிக்கிறது.

எனவே, விசாரணைக்கு ஒத்துழைப்பவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் செயலை கூடிய வரையில் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்