முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு கரம் நீட்டும் சஞ்சய் பாங்கர்

திங்கட்கிழமை, 7 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - ரோஹித் சர்மாவின் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும்நிலையில் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். காரணம், அவர் நிச்சயம் அணிக்கு நல்ல முறையில் பங்களிப்பு செய்து வருகிறார் என்றார் சஞ்சய் பாங்கர். இதுபற்றி பாங்கர் கூறும்போது, புள்ளி விவரங்களைப் பாருங்கள். அவர் 13 (14) டெஸ்ட் போட்டிகளில் ஆடி 800 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார், சராசரி 40 ரன்களுக்கு அருகில் உள்ளது.

இதில் 2 சதங்கள், 4 அரைசதங்கள், அடங்கும், இவரைப்போன்ற பிற வீரர்களின் முதல் 13-14 டெஸ்ட் போட்டிகளின் ரன்விகிதங்களை விமர்சகர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அப்படி ஒப்பிடும் போது ரோஹித் சர்மா மீது இவ்வளவு கடுமை இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு வீரரை நாங்கள் இறக்குகிறோம் என்றால் அவர் அதில் சிறப்புற போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

புஜாரா அந்த நிலையில் தடுமாற்றத்தில் இருந்தார், அதனால் ரோஹித்தை முயற்சி செய்து வருகிறோம். சிட்னியில் அவர் நன்றாக ஆடினார். நன்றாகத் தொடங்கினார் ஆனால் அதை பெரிய ஸ்கோராக அவர் மாற்ற முடியவில்லை. இலங்கைக்கு எதிராக 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கியமான பங்களிப்பு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்