முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா உருவம் பொறித்த தலைக்கவசங்கள் சென்னையில் மதுசூதனன்- ஆர்.பி. உதயகுமார் வழங்கினர்

வியாழக்கிழமை, 17 செப்டம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா உருவம் பொறித்த தலைகவசங்களை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் வாகன ஒட்டிகளுக்கு இலவசமாக வழங்கினர்.

தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தலைக்கவசம் உயிர் கவசம்’ என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.தலைக்கவசம் அணியாதவர்களை போலீசாரும் விழிப்புடன் இருந்து கண்காணித்து பிடிக்கிறார்கள். இதன்காரணமாக தலைக்கவசம் அணிவதில் அனைவரும் கவனம் செலுத்தி தலைகவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் நேற்று தமிழகம் முழுவதும் இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே வினாயகர் சதுர்த்தி தினமான நேற்று காலைஇலவச தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார். 200, பேருக்கு ஹெல்மெட்டுகளை அ. தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன்,வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினர் இந்த தலைக்கவசத்தின் முன்பக்கம் அ. தி.மு.க. கொடி, ஜெயலலிதா படம் பதிக்கப்பட்டிருந்தது.

இலவச தலைக்கவசங்களை வழங்கி அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன் பேசும்போது, முதலமைச்சர் அம்மா எப்போதும் தேர்தலைப் பற்றி சிந்தித்து எதையும் செயல்படுத்துபவர் அல்ல. அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர். எனவேதான் எண்ணற்ற தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். மக்களால் நான், மக்களுக்காக நான் என்று செயல்பட்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இன்று இலவச தலைக்கவசங்கள் வழங்கப்படுகிறது அம்மா தினசரி 20 மணிநேரம் உழைக்கிறார். தமிழக மக்கள்வாழ்க்கை வளம் பெற தமிழகம் முன்னேற்றம் காண திட்டங்களை கொண்டு வருகிறார் என்றும் அவர் பேசினார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், முதலமைச்சர் அம்மாவின் சரித்திரத்தில் முடியாது என்பது எதுவும் கிடையாது. முடியாது என்பதை முடித்து காட்டுவார். உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்காது. அப்படியே நடந்தாலும் தொழில் அதிபர்கள் வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் தொழில் முதலீடுகளை செய்ய மாட்டார்கள்என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் கூறவந்தார்கள். ஆனால் அவர்களது இந்தமோசடி பித்தலாட்ட பிரச்சாரங்களஎல்லாம் தவிடுபொடியாக்கினார். தொழில் அதிபர்கள் மாநாட்டைநடத்தினார். 1 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடு என்று நிர்ணயித்தார். ஆனால் நிர்ணயித்ததை விட தொழில் முதலீடுகள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடுகள் வந்து சேர்ந்தது. . இரண்டரை மடங்கு அதிகமாக தொழில் முதலீடுகளை ஈர்த்தார். இதுதான்அம்மா 20 ஆண்டுகளில் இல்லாத தொழில் முதலீடுகளை இரண்டேநாளில் ஈர்த்தார். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிக அளவில் வரும். இளைஞர்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இன்று தலைக்கவசம் வழங்கப்படுகிறது.தலைக்கவசம் கடைகளில் கிடைக்கும். ஆனால் அம்மாவின்படம் தலைக்கவசங்கள் இங்கு வழங்கப்படுகிறது. அம்மாவைகண்டாலே எதிர்வரும் எந்த ஆபத்தும் நீங்கும்.முதல்வர் ஜெயலலிதா உருவம் பொறித்த தலைக்கவசங்கள் அணிந்தாலே நமக்கு புண்ணியமும் அதிர்ஷடமும் வந்து சேரும். இந்த தலைக்கவசங்கள் அணிந்தால் எந்த விபத்தும் நம்மை நெருங்காது இந்த தலைக்கவசங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொகுதியில் அனுமதி அளித்ததே எனக்கு கிடைத்த அதிர்ஷடமாகும். . . என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, மாவட்ட அணி செயலாளர்கள்வெற்றிவேந்தன், டேவிட் ஞானசேகரன் மற்றும் அபிராமி பாலாஜி, கொளத்தூர் கணேஷ், ஆர்.எஸ். ஜனார்த்தனன், ஜெ.லலிதா, மாநகர போக்குவரத்து மாநகர் போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கசெயலாளர் கே.எஸ்.அஸ்லாம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் சத்தியநாராயணன், ஏ. ஆர். ஏழுமலை, ஆர்.கே.நகர் ஜி.சின்னி, பெரம்பூர் சேகர், ரவிராஜன் உட்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago