எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, புதுவை ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திடீர் திருப்பமாக கோகுலகிருஷ்ணன் அ தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அ தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அ தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி 28.9.2015 அன்று புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், அண்ணா தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, ரெட்டியார்பாளையம், உழவர்கரை தொகுதியைச் சேர்ந்த என்.கோகுல கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் கண்ணனின் பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய மாநிலங்களவை எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 28–-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 10–-ம் தேதி தொடங்கியது.வருகின்ற 18–-ம் தேதி மாலையுடன் வேட்புமனு தாக்குதலுக்கான காலக்கெடு முடிவடைந்து, 19–-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு 21-–ம் தேதி கடைசி நாள். 28-–ம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் அப்போதே எண்ணப்பட்டு 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியின் வேட்பாளரை மூன்று எம்.எல்.ஏக்களும், சுயேட்சை வேட்பாளர் எனில் பத்து எம்.எல்.ஏக்களும் முன்மொழிய வேண்டும். அப்படி முன்மொழியப்படவில்லை என்றால், அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். புதுவையைப் பொருத்தவரை ஆளும் கட்சியான ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குத்தான் சுயேட்சை எம்.எல்.ஏ.வையும் சேர்த்து 16 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசுக்கு 15 எம்எல்ஏக்களும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும், அண்ணாதிமுகவுக்கு 5 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 7 எம்எல்ஏக்களும், திமுகவுக்கு 2 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதனால், ஆளுங்கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே மாநிலங்களவை தேர்தலில் வெற்றிபெறும் சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். திமுக சார்பில் ஜெகத்ரட்சகனை நிறுத்த திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் ரங்கசாமி இல்லத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக கோகுலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அதற்கு சில எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த சூழ்நிலையில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கோகுல கிருஷ்ணன் திடீர் திருப்பமாக அண்ணாதிமுகவில் இணைந்தார்.
புதுச்சேரி மாநிலம், உழவர்கரை சட்டமன்றத் தொகுதி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த என்.கோகுலகிருஷ்ணன், திருவாரூர் மாவட்ட செயலாளரும், உணவு, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் ஆகியோர் முன்னிலையில் இன்று தன்னை அண்ணா தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அப்போது புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் பி.புருஷோத்தமன் எம்.எல்.ஏ., அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.அதைதொடர்ந்து அ திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோகுலகிருஷ்ணன் தேர்தல் அதிகாரி மோகன் தாசை சந்தித்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளருக்கான அங்கீகாரச் சான்று வழங்கப்பட்டது. வேட்பு மனுவில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புருஷோத்தமன், அன்பழகன், ஓம்சக்தி சேகர், பாஸ்கர், பெரியசாமி ஆகியோர் முன் மொழிந்து கையெழுத்திட்டிருந்தனர். முன்னதாக கதிர்காமம் முருகன் கோவிலுக்கும் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கும் வேட்பாளர் கோகுல கிருஷ்ணனுடன் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் காமராஜ், எம்.சி. சம்பத் ஆகியோர்சென்று வழிபாடு நடத்தினார்கள்.
பின்னர் அங்கிருந்து தேர்தல் அதிகாரியிடம் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். அ தி.மு.க. வேட்பாளர் கோகுல கிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. புதுவையில் தற்போது நிலவும் அரசியல் சூழல் போன்று ஏற்கனவே 1977–ம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியில் இருந்தார். புதுச்சேரி முதல்வராக ராமசாமியும், கவர்னராக குல்கர்னியும் பதவி வகித்தனர். அப்போது இதேபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டதால் எம்.ஜி.ஆர். உதவி நாடப்பட்டது. அப்போது தலித் சமூகத்தை சேர்ந்த வி.பி.எம். சாமி என்பவரை எம்.ஜி.ஆர். வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையின்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஜெயலலிதாவின் உதவியை நாடி கோகுலகிருஷ்ணனை அ தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கச் செய்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள