முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோனியின் சாதனையை யாரும் நெருங்க முடியாது: ரவி சாஸ்திரி புகழாரம்

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை - இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டனான டோனியின் சாதனைகளை யாரும் ஈடு செய்ய முடியாது என்று இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி புகழாரம் சூடியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணி இந்தியவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டி-20 போட்டி வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டி தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி கூறுகையில்,

ஒருநாள் போட்டிகளின் தலைசிறந்த வீரர்களுல் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். கேப்டனாக அவரின் சாதனைகள் அற்புதமானது. ஒருநாள் போட்டிகளில் அவருடைய சாதனைகளையும், கேப்டன்சியையும் யாரும் நெருங்க முடியும் என்று நினைக்கவில்லை. இப்போது தனது பொறுப்பை மீண்டும் அவர் எடுத்துக் கொள்கிறார். இது ஒன்றும் புதிதல்ல. எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கிறது.

வீரர்கள் அனைவரும் ஒரு சாம்பியனுக்கு கீழே விளையாடுகின்றனர் . தென் ஆப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணியை எதிர்கொள்வது சவாலான விஷயம் ஆகும். அது ஒரு அற்புதமான அணி. அந்த அணியை அசைப்பது எளிதான விஷயம் அல்ல. உலகின் வேறு எந்த அணியை காட்டிலும் தென்ஆப்பிரிக்கா தான் வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறது. இதற்கு புள்ளி விவரங்களே சான்று என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்