எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - நடிகர் விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் நேற்று விஜயின் வீடு உள்பட பல இடங்களில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தினர். மேலும் நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட திரையுலகினர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை திரையுலகில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் வீடுகளிலும் நேற்று காலை வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையைத் நடத்தினர். அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
நீலாங்கரையில் உள்ள விஜய் வீடு மட்டுமன்றி, புலி படத்தின் தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. மதுரையில் சினிமா தயாரிப்புக்கு ஃபைனான்ஸ் அளிக்கும் அன்பு வீட்டிலும் சோதனை நடைபெற்றது. புலி படத்துக்கு அதிகமாக ஃபைனான்ஸ் அளித்தது அன்பு தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். மேலும், விஜய் அடுத்ததாக நடித்து வரும் இயக்குநர் அட்லீ படத்தின் தயாரிப்பில் தொடர்புடையவர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அப்படத்தில் விஜய் நாயகியாக நடித்துவரும் சமந்தா, தயாரிப்பாளர் தாணு ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடைபெற்றது.
விஜய் படங்களின் தயாரிப்புகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது வீடு மற்றும் அலுவலகங்கள் என 35 இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும், இப்படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கியிருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்த அதிரடி சோதனைக்கு காரணம் புலி திரைப்படத் தயாரிப்பில் கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் இருப்பது தெரிய வந்துள்ளதால்தான் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.
இதனிடையே, புலி மற்றும் விஜய்யின் சமீபத்திய படங்களில் தொடர்பில்லாத நடிகை நயன்தாராவின் கொச்சி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புலி படம் இன்று ரிலீஸாக உள்ளது. புலி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் ரிலீசாக உள்ளது. பட ரிலீஸை கொண்டாடித் தீர்க்க ரசிகர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டார்கள். புலி படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் அந்த படம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை கொண்டு எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் சென்றதால் தான் இந்த சோதனை நடந்துள்ளது.
விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய்யின் வீடு மற்றும் புலி படக்குழுவினரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இன்று படம் ரிலீஸாக உள்ள நிலையில் சோதனை நடந்தது குறித்து அவர்கள் கவலை அடைந்துள்ளனர். சென்னை பல்லாவரத்தில் உள்ள நடிகை சமந்தாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சினிமாவில், விளம்பரங்களில் சம்பாதித்த பணத்துக்கு சமந்தா முறையாக வரி செலுத்தவில்லை என்று கூறி இந்த சோதனையை மேற்கொண்டனர் அதிகாரிகள். இதனைக் கேள்விப்பட்டு, அவரது வீட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்றனர் நிருபர்களை ஆங்கிலத்தில் திட்டியபடி, விரட்டியடிக்க முனைந்தார் சமந்தாவின் தாயார். உங்களுக்கு இங்கே வேலையில்லை. வெளியே போங்கள் என்று அவர் திட்டிக் கொண்டிருக்கும்போதே, உள்ளேயிருந்து வேகமாக வந்த சமந்தாவின் சகோதரர் செய்தியாளர்களைத் தாக்க ஆரம்பித்தார். இதனால் பதிலுக்கு அவரைத் தாக்க செய்தியாளர்கள் முனைந்தபோது, அவர் உள்ளே ஓடிவிட்டார்.
அவரை வெளியே வருமாறும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப் போவதாகவும் செய்தியாளர்கள் கூற, உடனே செய்தியாளர்கள்தான் தாக்கியதா அடாவடியாகப் பேச ஆரம்பித்துவிட்டார் சமந்தாவின் தாயார். அதன் பின்னர் சமந்தாவின் தந்தை பிரபு வெளியில் வந்து, வரிமான வரி குறித்து விளக்கம் கூறிவிட்டு கதவை மூடிக் கொண்டார். நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் திரையுலகினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய இச்சோதனை தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.