முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் வீட்டில் 2-வது நாளாகசோதனை

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை, நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அவர்களின் வங்கி கணக்குகளையும் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். வரி ஏய்ப்பு தொடர்பாக நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, புலி பட தயாரிப்பாளர்கள் சிபு தமீம், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பைனான்சியர்கள் ரமேஷ், அன்புச்செழியன் ஆகியோர் வீடுகள், அலுவலகங்கள் உள்பட தமிழகம், ஐதராபாத், திருவனந்தபுரம், கொச்சி உள்பட 32 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.2-வது நாளாக நேற்று நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, நயன்தாரா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டதாக கூறப்படுகிறது. நேற்று இவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் லாக்கர்கள் ஆகியவற்றையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்