முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையிடம் 28 தமிழக மீனவர்கள்-படகுகளை மீட்க நடவடிக்கை பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற 28 தமிழக மீனவர்கள் மற்றும் 30 படகுகளை மீட்க உடனடிநடவடிக் கை எடுங்கள் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா  கடிதம் எழுதியுள்ளார். பிரதமர்  நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதையும் தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிப்பதை தடுக்கப்படுவதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். தூத்துக்குடி மாவட்டம் தெரசாபுரத்தில்  இருந்து கடந்த 26-9-15அன்று 7 மீனவர்கள் ஒரு எந்திர படகில் மீன் பிடிக்கச் சென்றனர். 29-9-15 அன்று அவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து சென்று விட்டனர்.

தற்போது அந்த 7தமிழக மீனவர்களும் இலங்கையில் நெசாம்போ பகுதியில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடித்துச் செல்லப்படுவது இது 3வது சம்பவமாகும். தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையான இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு  காணும் பொருட்டு எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டது என்றாலும்இலங்கைஅரசின் செயல்பாடுகளால் கடல் பகுதியில் தொடர்ந்து அதே சூழலே நீடிக்கிறது.

எனவே மத்திய அரசு ,தூதரகம் மூலம் உறுதியான நடவடிக் கை எடுத்து தமிழக மீனவர்களின் நலனையும் உரிமையையும் காக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். பல தடவை இதுபற்றி கூறியுள்ள போதிலும் இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களை சிறை பிடித்துச்செல்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக மீனவர்களை விடுவிக்கும் இலங்கை அரசு அவர்களது படகுகளை திருப்பி ஒப்படைப்பது இல்லை. இலங்கையின் இந்த திட்டத்தால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

தற்போது இலங்கை வசம் தமிழக மீனவர்களின் 30 மீன் பிடி படகுகள் உள்ளன. பருவமழை காரணமாக அந்த படகுகள் பழுதடைந்து சேதமாகும் நிலையில் உள்ளன. இலங்கை அரசுடன் 1974மற்றும் 1976ம்ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி உள்ளசர்வதேச கடல் எல்லையை இந்தியா ஏற்கக்கூடாது.இதை வலியுறுத்தி நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தமிழக அரசும் தன்னை அதில் இணைத்துக் கொண்டுள்ளது.

எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன் பிடி பகுதியில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் மீன் பிடித்து தங்களது  வாழ்வாதாரத்தை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக மீனவர்கள் வழக்கமாக மீன் பிடிக்கும் மன்னார் வளை குடா பகுதியில் சுதந்திரமாக எவ்வித பயமும் இன்றி மீன் பிடிக்க அனுமதிக்கப்படவேண்டும். இதுதொடர்பாக அனைத்து ராஜாங்க வழிகளையும் பயன் படுத்தி பிரச்சினைக்கு தீர்வ காண முயல வேண்டும். நேற்று(புதன் ) கைது செய்யப்பட்ட 7மீனவர்களையும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 21மீனவர்களையும் இலங்கை வசம் உள்ள 30 படகுகளையும் மீட்க உடனடியாக நடவடிக் கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்