முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பில்லியர்ட்சில் சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானி பிரதமர் மோடியை சந்தித்தார்

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - சமீபத்தில் 14வது உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர் பங்கஜ் அத்வானி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைடு நகரில் சமீபத்தில் 14வது உலக பில்லியர்ட்ஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அவர் சிங்கப்பூரைச் சேர்ந்த பீட்டர் கில்கிறிஸ்ட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்  பில்லியர்ட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் வானி பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் பங்கஜ் அத்வானி ட்விட்டரில் இது  குறித்து செய்தி வெளியிட்டார். பிரதமரை சந்திக்கக்கூடிய கவுரவம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை அளித்த பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது வெற்றி குறித்தும் பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்று அவர் தனது ட்விட்டர் செய்தியில்  பகிர்ந்து கொண்டார். அவரது ட்விட்டர் பக்கத்தை 87ஆயிரம் பேர் பார்வையிடுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்